நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு காங்கிரஸ் சார்பில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் தலைமையில் நாட்டில் சிறுமிகளை பலாத்காரம் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு காங்கிரஸ் சார்பில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் தலைமையில் நாட்டில் சிறுமிகளை பலாத்காரம் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.