சென்னையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரிப் போராடிய அரூண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து மேடவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி, கைதானவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...