கோவை: அக்குவாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வது குறித்த கண்காட்சி இன்று கோவையில் தொடங்கியது.
அக்குவாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வது குறித்த கண்காட்சி இன்று கோவையில் தொடங்கியது.

வறட்சி காலங்களில் ‘அக்குவாபோனிக்ஸ்‘ முறையில் விவசாயம் செய்யும் முயற்சியை கோவையைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் வழக்கறிஞருமான ஏ.கே. சரவணன் மேற்கொண்டு வந்தார். இதற்கான கண்காட்சியை ஜி.ஆர்.ஜி கல்வி குழுமத்தின் தலைவர் நந்தினி ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில், ‘அக்குவாபோனிக்ஸ்‘ முறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை உற்பத்தி செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏ.கே. சரவணன் கூறுகையில், "அக்குவாபோனிக்ஸ் முறை விவசாயம் என்பது காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களை அக்குவாகல்ச்சர் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதாகும். இது எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் மீன் கழிவுகள் கொண்ட தண்ணீரை எடுக்க வேண்டும் அதில் இயற்கையாகவே அமோனியம் உற்பத்தியாகியிருக்கும். அந்த தண்ணீரை செடிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதன் பின் எங்களிடம் உள்ள 'பாக்டீரியா'வை அமோனியம் இருக்கும் நீருடன் சேர்க்க வேண்டும். 15 முதல் 45 நாட்களுக்குள் செடிகளுக்கு தேவையான புரதச்சத்து உற்பத்தியாகிவிடும். இது செடிகள் வளருவதற்கு அத்தியாவசிய சத்தாகும்.
இந்த செடிகளை மண்களில் வளர்க்க அவசியமில்லை. சரளை, கூழாங்கற்கள் போன்ற மண்ணில்லா விவசாயம் முறையில் இந்த செடிகளை வளர்க்கலாம். இதன்மூலம், இடபற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை குறையும்," என்றார்.
இந்த அக்குவாபோனிக்ஸ் விவசாயம் முறை குறித்து அறிந்து கொள்ள விரும்புவர்கள், மாதந்தோறும் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பயிற்சி பட்டறையில், ரூ. 2,500 கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். இந்தக் கண்காட்சி அரங்கு டாக்டர். அழகப்பா சாலை, டாடா பாத் பகுதியில் க்ளோ ஸ்டீம் லேப் (Glow STEAM Lab) என்ற பெயரில் இயங்கி வருகிறது.