கோவையில் மூன்று கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...