சாலை விரிவாக்கம் செய்ய சிறுவாணி சாலையில் 83 மரங்களை அகற்ற முடிவு

கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 



அரசின் இந்த திட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறுகையில்," இந்த சாலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியுடன் நிறைவடைகிறது. இதில், போக்குவரத்தும் அதிகம் காணப்படுவதில்லை. ஏன் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. விரிவாக்கப் பணிகளால் விலை மதிப்பற்ற மரங்கள் அழிக்கப்படுகின்றன. 83 மரங்கள் வெட்ட திட்டமிட்டதில், 40 மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...