கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் கோவை நீதிமன்றம் வளாக முன்புள்ள சாலையிலிருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் கைகோர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோ பேக் மோடி (Go back modi) , கோ பேக் மோடி என்ற முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், நியூட்ரினோ, மீத்தேன் ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நிமிடங்களிலேயே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெண்மணி கூறியதாவது :- மத்திய பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மீது எழுந்துள்ள மக்களின் கோபம் உயர்ந்து கொண்ட செல்கிறது. தமிழர்கள் மீது ஆபத்தான திட்டங்களை கொண்டு வர துடித்து வருகிறது. ஆனால், தேவையான நீரை தர மறுக்கிறது. தற்போது, எழுந்துள்ள கோ பேக் மோடி என்ற வார்த்தை சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது, என்றார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...