ஒரே நேரத்தில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த திருப்பூர் மாணவி

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி கோவை கனியூர் பகுதியிலுள்ள பார்க் குளோபல் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார். தனது ஒன்பது வயது முதல் யோகாவில் ஆர்வம் செலுத்தி வரும் இந்த மாணவி பல்வேறு தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியை தான் பயின்று வரும் பள்ளியில் இன்று அவர் மேற்கொண்டார். 



முன்னதாக, செலபாஸ் என்று அழைக்கப்படும் மார்பு பகுதியை மட்டும் தரையில் படும் படி உடலை வளைத்து உருண்ட படி சுமார் 13.8 வினாடிகளில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 15 வினாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இதேபோல், முக தாடையை தரையில் ஊன்றி ஏற்கனவே 2 நிமிடங்கள் யோகாசனம் செய்யப்பட்ட சாதனையை, சுமார் 7 நிமிட நேரம் நிலைத்து புதிய சாதனையை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.



இது மட்டுமின்றி முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குடுவைகளில் முட்டைகளை 18.28 வினாடி நேரத்தில் வைத்து கின்னஸ் சாதனை படைத்தார். ஒரே நேரத்தில் யோகாவில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த அம்மாணவி மேலும் இரண்டு வகை யோகா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...