மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு : உலகளவில் ட்ரெண்டான #GoBackModi

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் தமிழகத்தில் வீசி வருகிறது. இந்த நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைதானார்கள்.

இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு  தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் அதிகளவில் பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனால், உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் முதல் இடம்பிடித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...