காருண்யா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : பேராசிரியரின் கார் அடித்து நொறுக்கியதால் பதற்றம்

கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



சிறுவாணி செல்லும் சாலையில் காருண்யா கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், அக்கல்லூரியில் மிக அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் அக்கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்தப் போராட்டத்தில் 150 மாணவிகள் உட்பட பெண்கள் 700 பேர் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, "சஸ்பெண்ட் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், யூனியன் வேண்டும், கட்டணத்தை உயர்த்தாதே" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் எலிஜா பிளாசம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 



இதனிடையே, பேராசிரியர் ஒருவர் கல்லூரியின் வாயிற் கதவு திறந்த போது, காரை வேகமாக இயக்கினார். அப்போது, போராட்டம் நடத்தி வந்தவர்கள்  மீது கார் மோதியதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரின் காரை மடக்கி அடித்து நொறுக்கினர். இதனால், கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. 



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...