முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்க செயலி அறிமுகம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்டுகள்’ திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுக்களை “UTS” (அல்லது UTSONMBILE) என்னும் செயலியின் மூலம் வாங்கும் திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. 

ஜி.பி.எஸ். அடிப்படையிலான இந்த செயலியை ரயில்பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப்பரிவர்த்தனையை ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’ –ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ மேற்கொள்ளலாம். 

இதுவரை காகிதப் பயணச்சீட்டு இல்லாமல், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கெட்டுகளை ரயில்நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கி.மீ. தொலைவுக்குள் பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...