மேம்பாலம் கட்டும் பணிக்காக கட்டிடம் இடிப்பு: மாற்று இடத்திற்கான பணிகளும் தீவிரம்

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும், அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டம் துரிதமாக முடிக்கப்படும் என்றார். 

இந்த நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் இன்று காலை மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் 28 பழக்கடைகளும், 4 கோழி இறைச்சி கடைகளும் செயல்பட்டு வந்தன. மேம்பாலப் பணிகளுக்காக வணிக வளாகம் இடிக்கப்படவிருப்பதால் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

மாற்று இடம் கோரிய பழக் கடை வியாபாரிகளுக்கு தற்காலிகமாக லாரிப்பேட்டை வணிக வளாகத்தில் இடம் வழங்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. 4 கோழி இறைச்சி கடைகளுக்கும் பேரூர்-சுந்தராபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் விற்பனை வளாகத்தில் ஷெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

முன்னதாக, மீன் மார்க்கெட்டுக்குள் கோழிக்கடை அமைப்பதற்கு மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கோழிக் கடைகள் வருவதால் சில்லறை மீன் வியாபாரிகளுக்கும், வாகன நிறுத்துவதற்கும் இடையூறாக இருக்கும் என்று மீன் வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளோடு நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன் வியாபாரிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வளாகத்தின் ஜெனரேட்டர் அறைக்கு அருகே கோழிக் கடை அமைக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து மீன் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...