ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் : கோவையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே முழுமையான தீர்வு எனவும், இதை வலியுறுத்தி அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார். நாளை பிரதமர் வருகையை கண்டித்து அரசியல் கட்சிகள் நடத்தும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் தங்கள் கட்சி கலந்து கொள்ளாது எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சியினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர் எனவும், அது சரியானது தான் எந்ரும் கூறினார். 

சென்னையில் போராடியவர்களிடம் காவல் துறை இவ்வளவு கடினமாக நடந்து கொண்டு இருக்கத் தேவையில்லை என தெரிவித்த அவர் காவல் துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அ.ம.மு.க இணைந்து போராடும் எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா சிலையை கூட சரியாக வைக்கத் தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் இருக்கின்றனர் எனவும், யார் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். 

மேலும், அம்மா ஆட்சியை அ.ம.மு.க அமைக்கும் என்பதை ஊடகங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...