ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் : கோவையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே முழுமையான தீர்வு எனவும், இதை வலியுறுத்தி அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார். நாளை பிரதமர் வருகையை கண்டித்து அரசியல் கட்சிகள் நடத்தும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் தங்கள் கட்சி கலந்து கொள்ளாது எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சியினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர் எனவும், அது சரியானது தான் எந்ரும் கூறினார். 

சென்னையில் போராடியவர்களிடம் காவல் துறை இவ்வளவு கடினமாக நடந்து கொண்டு இருக்கத் தேவையில்லை என தெரிவித்த அவர் காவல் துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அ.ம.மு.க இணைந்து போராடும் எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா சிலையை கூட சரியாக வைக்கத் தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் இருக்கின்றனர் எனவும், யார் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். 

மேலும், அம்மா ஆட்சியை அ.ம.மு.க அமைக்கும் என்பதை ஊடகங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...