தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 



 

கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு, ஹாசன், சிமோகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு 20 கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல, தமிழகத்தில் இருந்து 11 பேருந்துகள் கர்நாடகத்துக்கு இயக்கப்படுகின்றன. 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுவதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் அனைத்து பேருந்துகளையும் கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. 



இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி புதுப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் கர்நாடக அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் சையத் ஜாகீர் அகமது புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் எதிரொலியாக மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வந்த கர்நாடக பேருந்துகள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டன. அதில் இருந்த தமிழக பயணிகளை சோதனை சாவடியில் இறக்கிவிடப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்ல அங்கு காத்திருந்த பயணிகளை கர்நாடக பேருந்துகள் ஏற்றிச் சென்றன. 



மேலும், கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சில வாகன ஓட்டிகள் கர்நாடக பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட்டை கழற்றி டி.என் என மாற்றிக் கொண்டு தமிழகம் வந்தனர். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி ஆசனூர் காவல் நிலைய சோதனைச் சாவடி, திம்பம் மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி மீண்டும் கர்நாடகத்துக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். சத்தியமங்கலம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கர்நாடக செல்லும் 11 அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...