கோவை வீல் சேர் கூடைப்பந்து அணிக்காக மினி மாரத்தான்

சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 



கே.ஜி. கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த மாரத்தான் போட்டிக்காக முன்பதிவு வரும் 20-ம் தேதி வரை நடை பெறுகிறது.



இது குறித்து சிற்றுளி அமைப்பின் நிறுவனர் குணசேகரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில் இந்த மாரத்தான் நடைபெற உள்ளது. அந்த அணியில் 18 பேர் உள்ளனர். அவர்கள் சாதாரண வில் சேரை பயன்படுத்தியே பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், விளையாடுவதற்கு உகந்த வீல் சேர் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.  



இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என மூன்று  பிரிவாக நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவை www.sittruli.org  என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும், சென்னை மொபைல்ஸ் கடைகளிலும் செய்து கொள்ளலாம்." என்றார்.    

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...