முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு குற்றவாளியான சந்தோஷ் என்ற வாலிபர் சரணடைய திருப்பூர் முதலாவது நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனிஸ்வரன் உள்ளிட்ட நான்கு காவலர்கள் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டனர்.

இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் காவல் துறையினரை கண்டித்து இன்று 700-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், அத்துமீறி நடந்து கொண்ட சிங்காநல்லூர் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...