காவிரி விவகாரம்: கோவை, திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க-வினர் கைது

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.



இதேபோல், திருப்பூரில் பா.ம.க.வினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ரயில் நிலையத்திற்குள் அவர்களை போலீசார் அனுமதிக்காததால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



மேட்டுப்பாளையத்தில் பா.ம.க-வை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரியில் ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு திரண்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...