காவலர்களைத் தாக்கியவர்களை கிள்ளி ஏறிய வேண்டும்: ரஜினிகாந்த் டுவீட்

சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார்.


சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவிரி,ஸ்டெர்லைட் ஆலை என்று பல பிரச்சினைகள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறக் கூடாது என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று மாலை சேப்பாக்கம் மைதானம் முன்பு கூடிய நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்களை கைது செய்ய வந்த காவலர்களை அக்கட்சியினர் தாக்கினர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:-



வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் போலீசார் தாக்கப்படும் போது உடனிருந்த நிலையில், அக்கட்சி தொண்டர்களை நேரடியாக சாடி பேசிய ரஜினிகாந்த்-க்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...