சேப்பாக்கம் மைதானத்தில் காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணியை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணியை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியது. 

இதற்கிடையே மைதானத்திற்கு உள்ளேயும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்திற்குள் ரசிகர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்திற்கு உள்ளே பார்வையாளர்கள் காலணிகளை வீசியது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்கள் மைதானத்தை நோக்கி காலணிகள், சட்டைகளை கழற்றி வீசி உள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் விசாரித்து 8 பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் காலணிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...