காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடம் : விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளைப் பராமரிக்க வேண்டி கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளது. இந்த பணியிடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பணியாற்றி வந்தார். 



அவர் பணியாற்றிய போது, முகாம் யானைகளை பராமரிப்பது, அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது, வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்படும் காட்டு யானைகளை பராமரிப்பது என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்த வன விலங்குகளை உடற்கூறாய்வு செய்வது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்,அவர் கடந்த மாதம் பணியிட மாறுதல் பெற்று திருப்பூர் சென்றார். அதன் பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முதுமலையில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் வளர்ப்பு யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. குறிப்பாக, கூடலூரில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, கூடலூரில் காலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், 8 நாட்களுக்கு பிறகே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகளைக் களைய முதுமலை பகுதிக்கு கால்நடை மருத்துவரை விரைந்து பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...