பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் கைது

கோவை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

கோவை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தின் சட்ட திருத்தத் தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிடிலையில், கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்திற்குள் ஊழியர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...