கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது - நகராட்சி ஆணையர்

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் உதகையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தின் மொத்தம் 56 அடி கொள்ளளவில் தற்போது இருப்பு 32.50 அடியாகக் குறைந்து விட்டது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் உள்ளூர் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளதால், கோடைக் காலத்தை சமாளித்து விடலாம் என நகராட்சி நிர்வாகம் நம்புகிறது.

ஆனால், தற்போதுள்ள இருப்பு கோடை சீசனின் போது உதகைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது. 

தாராளம்:

உதகை நகராட்சி ஆணையர்(பொ) சி.ரவி கூறுகையில், "உதகை நகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தை தவிர்த்து மற்ற நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. மார்லிமந்தில் 10 அடி, டைகர் ஹிலில் 37 அடி, கோரி சோலையில் 9 அடி , மேல் தொட்டபெட்டாவில் 19.50 அடி, மேல் கோடப்பந்தில் 6 அடி, கீழ் தொட்டபெட்டாவில் 14 அடி, கீழ் கோடப்பமந்தில் 5 அடி, ஓல்டு ஊட்டியில் 5 அடி மற்றும் கிளன்ராக் நீர்த்தேக்கத்தில் 2 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



பார்சன்ஸ் வேலியில் மின் உற்பத்தி நடப்பதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கான தண்ணீர் இருப்பை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டாம் என மின் வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும். இந்த இருப்பைக் கொண்டு ஏப்ரல் மாதம் வரை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். முறையாகக் கையாண்டால் பருவ மழைக் காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும், கோடை மழை பெய்தால், நீர்த்தேக்கங்கள் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது." என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...