திருப்பூரில் ஈஷா யோகா வகுப்பு நாளை தொடக்கம்

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது.

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது. 

திருப்பூரில் வள்ளிபாளையம் பகுதியில் நாளை மாலை 6 மணிக்கு அறிமுக உரையுடன் ஈஷா யோகா வகுப்பு தொடங்க உள்ளது. மாலை அறிமுக உரையுடன் நடைபெறும் இந்த யோகா வகுப்பு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது. 

வரும் 12-ம் தேதி காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. 

இந்த யோகா வகுப்பில் எளிமையான 'ஷாம்பவிமகா முத்ரா' பயிற்சி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பெறவும், மன வலிமை பெறவும், நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உறுதுணையாக அமையும் என்று ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வகுப்பு நடைபெறும் இடம்:  குமாரசாமி B திருமணமண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில் வள்ளிபாளையம், திருப்பூர். தொடர்புக்கு- 8300029000

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...