கோவையில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு : நீதிபதி கிருஷ்டோபர்

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட நீதிமன்ற வளாக அரங்கில் இன்று மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் அவர் பேசியதாவது :- உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ வழக்குகள் சமரச மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இச்சமரச மையத்தின் மூலம் நேரடியாகவே எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பயிற்சி பெற்ற சமரசர்கள் மூலம் சுமூகமான முறையில் வழக்குகள் முடித்துக் கொள்ள வழிவகுக்கப்படுகிறது. 

மேலும், சமரச மையத்தின் மூலம் தனியறையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை இரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமரச வழக்கு தரப்பினர்கள் தாங்களே முன்வந்து உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தீர்வுகள் மிக எளிய முறையிலும் வேகமாகவும் பண விரயமில்லாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை காண சமரசம் மையங்கள் உதவுகிறது.

கோலை மாவட்டத்தில் இதுவரை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் மூலம் 2006-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 5,294 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில், 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...