வண்டலூரில் இருந்த ‘கிரி’ ஆண் யானை முதுமலைக்கு ‘டிரான்ஸ்பர்’

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இம்முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை வனத்துறை ரோந்து பணிகளுக்காகவும், வனங்களை வீட்டு வெளியேறும் காட்டு யானைகளை விரட்டுதல் மற்றும் பிடித்தல் போன்ற கும்கி பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், தெப்பக்காடு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு யானை சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் இருந்த பாரி மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் பாரி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கும், விஜய் தெப்பக்காடு முகாமிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதற்கு பதிலாக காட்டு யானை விரட்டும் பணிகளுக்காக தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ஜான், சேரன் ஆகிய இரண்டு யானைகள் கடந்த 3-ம் தேதியன்று சாடிவயல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஒரு குட்டி யானை உட்பட 22 யானைகள் உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவல்கிரி வனத்தில் தாயை பிரிந்த நிலையில் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி கடந்த 2010-ம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த யானை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கிரி என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

தற்போது இதற்கு 9 வயதாகிறது. கும்கியாக மாற்ற பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் வண்டலூரில் இல்லாததால், இந்த யானையை முதுமலைக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து லாரி மூலம் முதுமலைக்கு அழைத்து வரப்பட்டது. அதன் உடல் எடை சரிபார்க்கப்பட்டு, பின்னர் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர், தெப்பகாட்டில் உள்ள பாம்பேக்ஸ் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. கிரியின் வருகையைத் தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...