அரசு - தனியார் பேருந்து ஊழியர்களிடையே தகராறு : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...