கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்ற வலியுறுத்தி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- சிங்காநல்லூர் நகரப் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுபானக் கடையின் பின்னால் இயங்கி வரும் டாஸ்மாக் பாரின் பின்புறம் மது அருந்த வருபவர்கள் கடையின் பின்வாசல் வழியாக மது அருந்துகின்றனர். மேலும், அங்கேயே சிறுநீர் கழிப்பது, மதுபாட்டில்களை சாலையிலேயே வீசிச் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களும் குடிமகன்கள் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்களுக்கும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.



மேலும். அவ்வழியாக செல்லும் பெண்களைப் போதை ஆசாமிகள் கேலி செய்கின்றனர். இது குறித்து கேட்டால் அவமரியாதையாக பேசுகின்றனர். இதுபோன்ற அநாகரிகமற்ற செயல்களால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் பாரை அகற்ற வேண்டும் அல்லது பின்புறமாக உள்ள கதவை சுவர் வைத்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...