கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்ற வலியுறுத்தி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- சிங்காநல்லூர் நகரப் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுபானக் கடையின் பின்னால் இயங்கி வரும் டாஸ்மாக் பாரின் பின்புறம் மது அருந்த வருபவர்கள் கடையின் பின்வாசல் வழியாக மது அருந்துகின்றனர். மேலும், அங்கேயே சிறுநீர் கழிப்பது, மதுபாட்டில்களை சாலையிலேயே வீசிச் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களும் குடிமகன்கள் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்களுக்கும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.



மேலும். அவ்வழியாக செல்லும் பெண்களைப் போதை ஆசாமிகள் கேலி செய்கின்றனர். இது குறித்து கேட்டால் அவமரியாதையாக பேசுகின்றனர். இதுபோன்ற அநாகரிகமற்ற செயல்களால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் பாரை அகற்ற வேண்டும் அல்லது பின்புறமாக உள்ள கதவை சுவர் வைத்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...