மாவட்ட ஆட்சியரிடம் லாரிப்பேட்டை பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு

கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.


கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரி புக்கிங் ஏஜெண்ட் அலுவலகம், பஞ்சர் கடை ஒர்க்‌ஷாப் என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். 1976-ம் ஆண்டு தங்களுக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கிய போது 120 கடைகள் இருந்தன. தற்போது, 220 கடைகளுக்கு மேல் அதிகரித்து 1,500-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

லாரிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பழைய மார்கெட்டுக்கு கொடுத்ததின் காரணமாக இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.



உக்கடம் பகுதியில் இயங்கி வரும் பழக் கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கு லாரிப் பேட்டையில் இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் பழங்கள் கோவைக்கு வருகின்றன. மேலும், செட்டிபாளையம் பகுதியில் 25 ஏக்கரில் இடம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அதில், அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...