சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா..? என வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும்: திருநாவுக்கரசர்

நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "தலித் மக்கள் மீதான சரத்துக்களை நீர்த்து போகும் விதமாக நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவா அமைப்புகள் மூலம் சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தை நீர்த்து போக செய்ததால், இவர்களின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும் கூடலூரில் அனைத்து மக்களையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ. 30 கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜென்ம நிலங்கள் பட்டா வழங்காமல் உள்ளதைக் கண்டிக்கிறேன்.

காவிரி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்காமல் இருந்தால் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூற முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரகால கண்டன போராட்டத்திற்குப்பின் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கர்நாடக அரசை விமர்சிக்கக் கூடாது. ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா என்பது குறித்து அந்த அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும்.

தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பலரும் இணைவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்தை சபாநாயகர் நீக்கி இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவு வந்ததும் இந்த ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சூரப்பா, வீரப்பா, கட்டப்பாக்களைப் போடுவதைவிட முறைப்படி தேர்ந்தெடுப்பதில் வேறுமாநிலத்தைசேர்நத்வரைநியமித்திருக்க வேண்டாம். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. பலவீனத்தை மறைப்பதற்கு மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...