தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் : ரஜினிகாந்த் காட்டம்

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் போராட்டத்தில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சிவகுமார், சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இந்த போராட்ட களத்துக்கு ரஜினி கலந்து கொள்வதற்கு முன்னர் சென்னையில் போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும். ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும். 

இயற்கையான மண், காற்று, நீரை மாசுபடுத்த விடக் கூடாது. பஞ்சபூதங்களை மாசுபடுத்தினால் அது உலகத்தையே அழித்துவிடும். என்ன தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது. மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணியலாம். கர்நாடகத்தில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்களும் மாநில அரசும் பார்த்து கொள்ளும். நியாயமான கோரிக்கைக்காக நாம் போராடுகிறோம். யாரும் எந்த மாநிலத்திலும் பணி செய்யலாம். அதுதான் இந்தியாவின் சிறப்பு. எனினும் காவிரிக்காக போராடி வரும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவரை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம். " என்றார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...