அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை புறக்கணித்த தேயிலை விவசாய உறுப்பினர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...