போலி பத்திரங்கள் மூலம் பல கோடி மோசடி செய்த ஆசாமியிடம் தீவிர விசாரணை

திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 



கடந்த மாதம் 22-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் போலி பத்திரங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த சூரியநாராயணன் என்ற நபரை திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் போலி பத்திரங்களை தயாரித்து ரூ. 97 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. 



இந்த நிலையில், அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் நாளான நேற்று, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. சூரியநாராயணனை பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 4-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். 

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான மோசடிகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...