திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருப்பூர்: போலி பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் போலி பத்திரங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த சூரியநாராயணன் என்ற நபரை திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் போலி பத்திரங்களை தயாரித்து ரூ. 97 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில், அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் நாளான நேற்று, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. சூரியநாராயணனை பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 4-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான மோசடிகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் போலி பத்திரங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த சூரியநாராயணன் என்ற நபரை திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் போலி பத்திரங்களை தயாரித்து ரூ. 97 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில், அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் நாளான நேற்று, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. சூரியநாராயணனை பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 4-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான மோசடிகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.