காவிரி மேலாண்மை கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு சார்பாக கோவையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் மதியம் மதியம் 1 மணி வரை கடையடைப்பு இருக்கும் என்று ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாவட்ட அந்த அமைப்பின் செயலாளர் ஆர்.பாலசந்தர் கூறுகையில், "விவசாயிகளிடம் பொருட்களை பெற்று தான் உணவு விடுதிகள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாங்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். விவசாயம் இல்லாமல் விவசாய சார்ந்த காய்கறிகள், அரிசி போன்ற பொருட்கள் விலையேறினால் உணவுகளின் விலையும் அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இந்த போராட்டம் காரணமாக வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்கள் மற்றும் கோவையில் பணி புரிபவர்கள் காலை உணவுக்காக சிரமப்பட்டனர். 

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...