காவிரி மேலாண்மை கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு சார்பாக கோவையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் மதியம் மதியம் 1 மணி வரை கடையடைப்பு இருக்கும் என்று ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாவட்ட அந்த அமைப்பின் செயலாளர் ஆர்.பாலசந்தர் கூறுகையில், "விவசாயிகளிடம் பொருட்களை பெற்று தான் உணவு விடுதிகள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாங்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். விவசாயம் இல்லாமல் விவசாய சார்ந்த காய்கறிகள், அரிசி போன்ற பொருட்கள் விலையேறினால் உணவுகளின் விலையும் அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இந்த போராட்டம் காரணமாக வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்கள் மற்றும் கோவையில் பணி புரிபவர்கள் காலை உணவுக்காக சிரமப்பட்டனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...