முக்தியடைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் அஞ்சலி

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



காஞ்சி சங்கராச்சாரியார் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜெயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினத்தின் இளைய பண்டிட் மருதாச்சல அடிகளார் பேசுகையில், "இவரது தலைமையில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இரங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, சீயரின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக விளங்கியது," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...