கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை : மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோவையில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜெயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினத்தின் இளைய பண்டிட் மருதாச்சல அடிகளார் பேசுகையில், "இவரது தலைமையில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இரங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, சீயரின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக விளங்கியது," என்றார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜெயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினத்தின் இளைய பண்டிட் மருதாச்சல அடிகளார் பேசுகையில், "இவரது தலைமையில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இரங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, சீயரின் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக விளங்கியது," என்றார்.