நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.

முதுமலை கார்குடி சரகத்துக்கு உட்பட்ட காஞ்சிக்கொல்லி பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சூழல் மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலமாக காகித மறுசுழற்சி மூலம் பைகள், உரைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, துணை இயக்குநர் ஏ.சரவணன், கார்குடி சரகர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மையம் காஞ்சிக்கொல்லி சூழல் மேம்பாட்டுக்குழு மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.