காவிரி விவகாரம் : கோவையில் ஓட்டல்கள் நாளை ஸ்டிரைக்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நாளை (ஏப்.,03) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் உள்ள அனைத்து ஓட்டல்கள் நாளை (செவ்வாய் கிழமை) காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறக்கப்படாது என கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மருந்துக் கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...