கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் நாளை (ஏப்.,03) ஓட்டல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நாளை (ஏப்.,03) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் உள்ள அனைத்து ஓட்டல்கள் நாளை (செவ்வாய் கிழமை) காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறக்கப்படாது என கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மருந்துக் கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நாளை (ஏப்.,03) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் உள்ள அனைத்து ஓட்டல்கள் நாளை (செவ்வாய் கிழமை) காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறக்கப்படாது என கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை மருந்துக் கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.