கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.
கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை மார்கெட்டில் வாரம்தோறும் 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வியாபாரிகள் ஒன்று கூடி, மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாரியம்மன் கோவில் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தனி நபர் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தையைப் பகுதிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திக்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய இடத்தை மாற்ற வேறு இடம் செல்லுமாறு நிர்பந்திப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்போது உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை மார்கெட்டில் வாரம்தோறும் 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வியாபாரிகள் ஒன்று கூடி, மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாரியம்மன் கோவில் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தனி நபர் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தையைப் பகுதிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திக்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய இடத்தை மாற்ற வேறு இடம் செல்லுமாறு நிர்பந்திப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்போது உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.