தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்ப பெறக் கோரி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்ப பெறக் கோரி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி எம்.பி.பி.எஸ் படித்தால் மட்டும் தான் அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். மசோதாவின் படி, சித்தா, ஆயுர்வேதம் பயின்றவர்களும் தனி கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு எந்த வித தேர்வுமின்றி அலோபதி மருத்துவர்களாக செயல்படலாம்.

மத்திய அரசின் இந்த செயல்பாட்டுக்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள சில சரத்துகளை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர். ரவிசங்கர் கூறுகையில், "மருத்துவ துறையில் முன்னேறி வரும் இந்தியாவில் மாற்று மருத்துவர்களை அலோபதி மருத்துவர்களாக்கும் முயற்சி தவறான முன்னுதாரணமாக உள்ளது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அரசின் தவறான இந்த கொள்கையை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும். இதனால் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படும். எங்களின் நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...