கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், "தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மத்திய அரசின் மீது, தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் தி.மு.க.வினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டங்களால் கோவையின் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.