காவிரி விவகாரம்: கோவையில் பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், "தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மத்திய அரசின் மீது, தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் தி.மு.க.வினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டங்களால் கோவையின் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...