கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் புவன கங்காதரன். இவர் மேற்கு இந்திய தீவில் செயின்ட் லூயிஸ் நகரில் பார்டன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று புவன கங்காதரன் அவரது நண்பர்களான பெங்களூரை சேர்ந்த இந்துமதி மற்றும் சேலத்தை சேர்ந்த பூபதி ஆகியோருடன் அந்நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.
அங்கு கடற்கரை ஒட்டியுள்ள பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கடல் அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.
அன்னூரில் உள்ள புவன கங்காதரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் இந்தியா கொண்டுவராமல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தூதரகம் மூலம் தங்களது மகனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் புவன கங்காதரன். இவர் மேற்கு இந்திய தீவில் செயின்ட் லூயிஸ் நகரில் பார்டன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று புவன கங்காதரன் அவரது நண்பர்களான பெங்களூரை சேர்ந்த இந்துமதி மற்றும் சேலத்தை சேர்ந்த பூபதி ஆகியோருடன் அந்நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.
அங்கு கடற்கரை ஒட்டியுள்ள பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கடல் அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.
அன்னூரில் உள்ள புவன கங்காதரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் இந்தியா கொண்டுவராமல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தூதரகம் மூலம் தங்களது மகனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.