கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினர்.
கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினார்.
ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து திருநங்கைகளுக்கு உதவிகளும், தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா திருநங்கைகள் 4 பேருக்கு ஆட்டோக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஓரு முன்னுதாரணமான நிகழ்ச்சி. திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. காவல்துறையில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு மரியாதையான வேலைகள் வழங்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். தனியார் நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வரவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வை மாறி வருகிறது", எனத் தெரிவித்தார்.