திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை வழங்கிய கோவை மாநகர போலீஸ்

கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினர்.


கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினார்.

ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து திருநங்கைகளுக்கு உதவிகளும், தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா திருநங்கைகள் 4 பேருக்கு ஆட்டோக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஓரு முன்னுதாரணமான நிகழ்ச்சி. திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. காவல்துறையில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு மரியாதையான வேலைகள் வழங்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். தனியார் நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வரவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வை மாறி வருகிறது", எனத் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...