மாணவர்களின் போராட்டம் இன்னும் பரவும்: மெரீனா போராட்டம் குறித்து கமல் கருத்து

மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இன்று போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், “ காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது, இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தி.மு.க., நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு", இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் கட்சிக்கு உண்ணாவிரதத்தின் மேல் நம்பிக்கையில்லை, என்றார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...