மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இன்று போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், “ காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது, இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தி.மு.க., நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு", இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் கட்சிக்கு உண்ணாவிரதத்தின் மேல் நம்பிக்கையில்லை, என்றார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இன்று போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், “ காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது, இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தி.மு.க., நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு", இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் கட்சிக்கு உண்ணாவிரதத்தின் மேல் நம்பிக்கையில்லை, என்றார்.