கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.
கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.

எட்டிமடை ரயில் நிலையம் சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவன அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசை அமைப்பினர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களிடம் பேசி மரங்களை வெட்டாமல், இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள், பல்வேறு தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தால், மரத்தினை வெட்டும் பணி கைவிடப்பட்டது.